ஆகஸ்ட் 17 | ஆற்றலின் அதிகரிப்பு | தினசரி தியானம்

1 month ago

நாட்டினின்று விரட்டியோட்டப்பட்ட சுக்ரீவனுக்காகவென்று ஹனுமான் சேவை புரிந்து கொண்டிருந்தான். அது சுயநலமற்ற சேவை. ஆதலால் அவன் ஆற்றல் மிகப் படைத்தவன் ஆனான். பின்பு அதே ஹனுமான் ஸ்ரீ ராமனுக்காகவென்று பணி விடைகள் புரிந்தபொழுது அவனுடைய ஆற்றல் பன்மடங்கு பெரிதாய்விட்டது. தெய்வத்துக்கென்றே தொண்டு புரிபவர் தெய்விக ஆற்றல் மிகப் பெறுகின்றனர்.

Loading comments...